ஸ்ரீ ஹரதத்தாச்சாரிய சுவாமிகள்
வாழ்வில் நடந்தவை
1. ஒருநாள் அக்னீஸ்வர ஸ்வாமிக்கு திருத்தொண்டு செய்யும் சில கணிகைகள் அவர்தம் பணிக்கு வராது, தாமதமாக மறுநாள் ஆலயப்பணிக்கு வந்தமையால், கோவிலதிகாரிகள் அவர்களைத் தண்டித்து, அக்கணிகைகளை கோவில் மண்டபத்தில் ஏற்றி அன்ன ஆகாரமில்லாது மிகவும் வருத்தினார்கள்.
ஹரதத்தரோ, வழக்கமாகத் தாம் வரும் காலம் தப்பி மத்தியானத்திற்குப் பின் தனது நித்திய ஆலயசேவையின் பொருட்டு அங்கே வந்தவரிடம் அக் கணிகைகள் தங்கள் துயரத்தினைக் கூற, “உங்களைத் தண்டிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த தண்டனையைப் பெறும் உங்களது பாக்கியம் எனக்கில்லை!.... என்னைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் அதிகாரிகள் ஒருவரும் இல்லை! ஆலய சேவைக்கு தாமதமாக வந்த என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன்!” என்று தன் தலையை கருங்கல் தூணில் முட்டிக் கொண்டும், அழுது புரண்டும் மூர்ச்சித்துத் தரையில் விழுந்தார். இவரது இச்செய்கை கண்டு மனத்துயரம் அடைந்த கோவிலதிகாரிகள் செய்வதறியாது அக்கணிகையரை விடுவித்தனர்.
2. மேற்குறித்த நாளன்று ஹரதத்தர் தமது நித்தியக் கர்மாநுஷ்டங்களை முடித்துத் தம் கிருஹத்தில் சிவபெருமானுக்குப் பூஜை செய்து அபிஷேகம் செய்யும் போது, நாயொன்று தாக மேலீட்டினால் நாக்கை நீட்டவே, இவர் அந்த சங்காபிஷேக ஜலத்தினை அந்த நாயின் நாவிலே விட்டு எஞ்சியதைச் சிவலிங்கத்தில் அபிஷேகஞ் செய்தார். இவரது இக்காரியத்தினைக் கண்டவர்கள், “நீர் அநுசிதமான காரியத்தை இவ்விதம் செய்யலாமோ?” என்றதற்கு, “என்மீதுள்ள அன்பினாலே சிவபெருமானெ இந்நாயுருக் கொண்டு எழுந்தருளினால் யான் என்ன செய்ய?” என்றார்.
3. ஓர் நாள் மன்னர் சிவலிங்க பூபதி, அக்னீஸ்வரப் பெருமானுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு மிகுந்த விலை மதிப்புள்ள பீதாம்பரம் ஒன்றினை ஹரதத்தரிடம் சமர்ப்பிக்கச் சொல்லி தம் பணியாளரிடம் தந்தனுப்ப, அச்சமயம் ஹரதத்தர் அக்னி வளர்த்து ஹோம காரியம் செய்து கொண்டிருக்கவே, அரசனுடைய பணியாட்கள் தன்னிடம் நீட்டிய அந்தப் பீதாம்பரத்தினை, சிவபெருமானை சிந்தனை செய்து அந்த ஹோம குண்டத்தில் இட்டு பஸ்மீகரமாக்கினார். இவரது இச்செய்கையை தம் பணியாள் மூலம் அறிந்த மன்னன், ஹரதத்தர் மீது எவ்வித வெறுப்புமின்றி, ஹரதத்தர் எல்லாம் தெரிந்தவராதலால் அவரையே இவ்விஷயம் குறித்துக் கேட்டறிய ஹரதத்தரது கிரஹத்திற்கு வந்தார்.
மன்னனது உளக்குறிப்பையறிந்த ஸ்ரீ ஹரதத்தாச்சாரியார், மன்னனை அழைத்துக் கொண்டு போய் அக்னீஸ்வரர் ஆலயத்தில் அம்மன்னன் அளித்த வஸ்திரம், ஸ்ரீ அக்னீஸ்வரருக்குச் சார்த்தப் பட்டிருப்பதைக் காண்பித்தார். சிவலிங்கச் சோழமன்னன், தமது குற்றம் பொருக்க வேண்டுமென அவரது பாதத்தைத் தம் கண்ணீரால் அலம்பி, மன்னிப்புக் கோரினான்.
4. ஹரதத்தர் வாழ்ந்த அக்ரஹாரத்திலே நிறைய பசுக்களை வளர்த்து வந்த ஒர் அந்தணன், ஒரு நாள் தன் வீட்டுக் கொல்லைப்புறமாக வைக்கோற் கட்டை மதிலோரமாகப் போட்ட பொழுது, அம்மதிலின் மறுபுறத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளம் கன்று ஒன்று அவ்வைக்கோற் கட்டின் பாரம் தாங்காது அதிர்ச்சியில் இறந்தது. இதையறிந்த அப்பிராமணன் மிகுந்த துயருற்றான்.
“நீ கோஹத்திச் செய்தாய்! நீ கோஹத்திச் செய்தாய்!!” என்று ஊரார் அவரை துவேஷித்து நிந்தா வார்த்தைகள் கூறி அவரை மேலும் கலக்கமடையச் செய்யவே, இதற்கோர் பிராயச்சித்தம் ஸ்ரீ ஹரதத்தர் சொல்வார் என்று ஹரதத்தரது வீட்டிற்குள் பதட்டத்துடன் நுழைந்த அப்பிராமணரது தலையில் வீட்டு வாயிற்படி இடித்தது. இடிபட்ட வலி தாங்காத அப்பிராமணன், “சிவ சிவ” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
அவர் வந்த விவரம் அறிந்த ஸ்ரீ ஹரதத்தர், “என் வீட்டிற்குள் நுழைந்த போது நீர் முதலில் சொன்ன சிவ எனும் சப்தத்தினால் உன் கோஹத்தி பாவ விமோசனமும். இரண்டாம் முறை சொன்ன சிவ சப்தத்தினால் மரித்த அக்கன்றுக்கு முக்தியும் உண்டாயிற்று!” என்று சொன்னார்.
ஹரதத்தருடைய விட்டில் அவ்வமயம் அங்கிருந்த இன்னொரு பிராமணன், “பாவிகள் ஈசனை வணங்குதல் முறையாகாது.... இவனோ கோஹத்தி செய்த மஹா பாபி.... இவன் செய்த அக்கொடுரச்செயல் இவன் சொன்ன சிவநாமத்தினால் நிவாரண மெய்துமோ!......? வேடிக்கை!!” என்று சொன்னான்.
இவ்விதம் தன் சந்தேகத்தினை வெளியிட்டவனை நோக்கி ஹரதத்தர், “சிவ பெருமானுடைய மாயையானது பிரம, விஷ்ணுக்களையும் மயக்கிவிடுமே!.... இவனை அது தப்பவிடுமா!... சிவ நாமத்தினாலே ஒழிக்கத்தக்கப் பாவத்தினை செய்யத் தக்கவர்கள் இவ்வுலகில் இல்லை என்பதினால்தான் ஸ்மிருதிகளிலே இந்த சிவநாமம் பிராயச்சித்தமாக சொல்லப்பட்டிருக் கிறது... உங்களுக்கெல்லாம் இவன் செய்த பாவம் நீங்கியது என்பது தெரியவேண்டுமென்றால், இவன் என்ன செய்யவேண்டும்?!....” என்று கேட்கவே, அப்பிராமணனுடைய கருத்தைக் கொண்ட ஊரார் அனைவரும் ஒருமனதாகத் தீர்மானித்து, “கோஹத்தி செய்த பிராமணன் தரும் புல்லினை அக்னீஸ்வரர் ஆலயத்திலுள்ள கல்நந்தி சாப்பிட்டால் ஒப்புக்கொள்வதாகச்” சொன்னார்கள்.
கோஹத்தி செய்த அந்த பிராமணனும், முறைப்படி பூஜை புனஸ்காரங்கள் முடித்து அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரை நமஸ்கரித்து, அங்குள்ள நந்தியெம் பெருமானது வலதுபுறம் நின்று தம் கையில் அறுகம்புல் வைத்துக்கொண்டு, “அஷ்டமூர்த்தியாகிய சிவபெருமானைத் தாங்குபவரே!.... தயாநிதியே!... சிவநாமோச் சரத்தினால் என்பாவம் நீங்கிற்று என்றால், இந்தப் புல்லைச் சாப்பிட்டு என்னை எப்போதும் ரக்ஷித்தருளுக!” என்று வேண்டியவுடன், விருஷபதேவர் தன் நாக்கை அவர் பக்கம் சுழட்டி அவரளித்த அறுகன் புல்லைக் கிரஹித்து உண்டார். அதுகண்டு கூடியிருந்த அக்ரஹாரத்தினர் 'அவரது பாவம் ஒழிந்தது! ஒழிந்தது!!' என்றும், 'ஹரதத்தர் சாட்சாத் சிவ ஸ்வரூபியே' என்றுணர்ந்து அவரை நமஸ்கரித்து, அவரவர் தத்தமது வீடு போனார்கள்.
5. நிறையப் பிள்ளைக் குட்டிகளுடன் மிகுந்த வறுமையில் வாடின சதாசிவம் எனும் பிராமணரது வீட்டில் ஓர்நாள் ஸ்ரீ ஹரதத்தர் உணவு உண்கையில் அவரது வறுமை நிலையறிந்து, மன்னர் சிவலிங்க பூபதியினால் அவரை அவரது ஏழ்மையிலிருந்து நல்ல நிலைக்கு ஏற்றினார்.
6. ஒரு சமயம் ஸ்ரீ ஹரதத்தரது தாயார் நெல்லைக் காயவைத்துக் கொண்டு இருந்த போது அந்நெல்லை ஓர் காளை வந்து மேயவே, அவரது தாயார் அக்காளையை வெகுவாய் அடித்துத் துரத்தினார். அதைக் கண்ட ஹரதத்தர், “ஏனம்மா இப்படிச் செய்தாய்?” என்று கேட்க, “சிவநிவேதனத்துக்கு ஒன்றுமில்லையாதலால், இதைக்கொண்டு அது நடத்தல் வேண்டும்.. அதனால் இப்படிச் செய்தேன்!” என்றாள்.
அச்சமயம், மன்னர் சிவலிங்கபூபதி இவருக்கு 400 மூட்டை நெல்லை அனுப்பியதில், இருநூறு மூட்டைகள் நதிப்ரவாகத்தில் போய்விட்டதை, கொண்டு வந்தவர்கள் சொன்னதும், ஹரதத்தர் தன் தாயாரிடம், “நீ காளையைத் திண்ணவொட்டாது அடித்து ஓட்டிய உன் துர்ச்செயலால்தான் நாநூறு இருநூறானது!” என்றார் சிரித்துக் கொண்டே!.
7. ஒரு சமயம் இவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போது நாயொன்று களைந்து வைத்த அரிசியில் வாயை வைக்கவே, சமையல் வேலையில் இருந்த அவரது மனைவி, கையில் வைத்திருந்த அறிவாள் மனையினால் அடிக்க, அது நாய் மீது பட்டு மூர்ச்சித்து வீழ்ந்தது. அப்போது அங்கு வந்த ஹரதத்தர், நடந்தவை அறிந்து, "நீ வாசலைத் தாழிடாததினால்தான் நாய் உள்ளே புகுந்தது. உன் குற்றம் இப்படி இருக்க, நீ நாயைத் தண்டித்தது முறையல்ல!...” என்று கூறி அந்நாயைத் தன் மடிமீது கிடத்தி, அதற்கு உருத்திராக்ஷம் தரிப்பித்து, விபூதியை உடலெங்கும் பூசி, பஞ்சாக்ஷரம் ஜெபித்து, அந்நாயைப் பூதசரீரத்திலிருந்து, தேவ சரீரத்தினை எடுப்பிக்கச்செய்து அதற்கு கைலாயக் கதியருளினார்.
8. தன் தாய் காளையை வெருட்டியதற்கும், மனைவி நாயை அறிவாள்மனையால் அடித்ததற்கும் பிராயச்சித்தம் செய்வதற்கு, “தெரிந்தும் தெரியாமல் செய்த மஹா பாபங்களுக்கு, ஏகாந்தத்தில் இருந்து சிவ நாமத்தினை ஜெபித்தலே பிராயச்சித்தமாம்” எனும் பொருளில் ஒர் ஸ்லோகம் எழுதினார். இதில் முதல் வரி இவரும் இரண்டாம் வரியை ஹரதத்தர் குளிக்கச்சென்றபோது, இவருருவில் வந்த ஸ்ரீ மஹாதேவரும் எழுதியதாகும். அந்த ஸ்லோகம்:
ஞாநாஞ் ஞாநப்ரயுக்தாநாம் பாபாநாம் மஹதாமபி |
ஏகாந்த நிஷ்க்ரதிச் சம்போஸ்ஸகிர் தேவஹிகீர்த்தநாத் ||
9. ஓர் நாள் இவர் காவிரியில் ஸ்நாநம் செய்யப் போன போது, அங்கு ஒரு சண்டாளன் ஒருவன், தன் மனைவியைக் காவிரியில் குளிக்காதே! என்று தடுக்க, அவளோ, 'காவிரியைத் தரிசித்தாலும், அதில் குளித்தாலும் மஹாபாபங்கள் நீங்குவதாக நீதானே சொன்னாய்?' என்று திருப்பிக் கேட்டதற்கு, அச்சண்டாளன், “அடீ.. காவேரித் தீரத்திலே எவ்வளவு மணலுண்டோ அவ்வளவும் சிவலிங்கமடி!! “ என்றதைக் கேட்ட ஹரதத்தர், அச்சண்டாளனின் காலில் வீழ்ந்து வணங்கி, அவனது செருப்பைத் தன் தலைமீது வைத்து ஆனந்தக் கூத்தாடி, “உலகத்திலே சிலர் ஞானத்தைத் தாங்குகிறார்கள்... வேறு சிலர் தன் கர்மத்தைச் சுமக்கிறார்கள்.. நாமோ இந்தச் சிவபக்தருடைய பாதரக்ஷயைத் தாங்குகிறோம்!.” என்று மகிழ்ந்தார்.
10. தம்மைச் சரணடைந்து கைலாயம் செல்ல விரும்பிய மன்னர் சிவலிங்க பூபதியிடம், “அரையாமப் பொழுதிற்குள் அக்னீஸ்வரர் ஆலயத்தையும், அதைச் சுற்றியுள்ள ஏழு சிவாலயங்களையும் தரிசனம் செய்தால் உமக்குக் கயிலாயக் காட்சி கிட்டும்!” என்று ஹரதத்தர் சொல்லியவாறு மன்னன் தன் பரிவாரங்களுடன், குதிரை மீதேறிச் சென்று அவ்வேழு சிவாலயங்களையும் தரிசித்து முடித்து ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம் நுழைந்த போது, மன்னனுடனே ஓடிவந்தக் களைப்பில் குடைபிடிப்போனும், குதிரையும் மூர்ச்சித்து விழுந்தனர்.
சேவகனும், குதிரையும் அவ்விதம் மூர்ச்சித்த மறுகணம், அங்கு வந்த புஷ்பக விமானதில் அவர்கள் தம் சரீரத்துடனே ஏறி கயிலைக்குச் சென்றனர். மன்னனோ, மிகுந்த மனக்கலக்கம் அடைந்தவனாக, குதிரையும், தன் சேவகனும் செய்த பாக்கியத்தை தான் செய்யவில்லையோ? என்று மிகவும் வருந்தி, தன் குதிரையும், குடைபிடித்து வந்த சேவகனும் விமானம் ஏறி கயிலைக்குச் சென்றது போன்று, தான் செல்ல முடியாததற்கு ஸ்ரீ ஹரதத்தாச்சாரியரிடம் காரணம் கேட்டான். தன்னிடம் இவ்விதம் மிகவருந்தி உபாயம் கேட்ட அரசனிடம் ஹரதத்தர், “உன்னுடன் வந்த அவ்விருவரது சரீர சிரமத்தினை நீ அடையாமல், அரசன் எனும் அகந்தையில் ஏழு சிவாலயங்கள் சென்று வந்தாய். தேக சிரமம் பாராமல், தான் என்கின்ற எண்ணத்தை விட்டு, மீண்டும் நீ பாதாசாரியாய் அந்த ஏழு சிவாலயங்களை தரிசித்து விட்டு வருவாயேயானால் அவர்களுக்கு கிடைத்த அந்த நற்கதி உனக்கும் கிட்டும்.” என்றபடி மன்னனும் அதன்படிச் செய்து தன் சரீரத்துடன் தேவர்கள் பூச்சொரிய, சிவபெருமானுடன் வாஹனத்தின் மீதேறிக் கயிலை சென்றார்.
11. கஞ்சனூரில் புதிதாய் குடியேறிய தாசி ஒருத்தியை அடைய பக்கத்து ஊர் பிராமணன் ஒருவன் அவளிடம், தான் ஹரதத்தரின் புதல்வர் என்றும், வேண்டும் பொருள் தருவேன் என்றும் ஆசைவார்தைகள் நிறைய கூறி, அவளுடன் சில நாட்கள் சுகித்திருந்துவிட்டு ஓர்நாள் அப் பிராமணன் ஒன்றும் கொடுக்காமல் தனது கிராமத்திற்குச் சென்று விட்டான். தன்னை வஞ்சித்த அப்பிராமணனது செயலுக்கு நியாயம் கேட்க, அத்தாசியானவள் ஹரதத்தரை அடைந்து நடந்தது கூறி, நியாயம் கேட்டாள். ஹரதத்தர் ஒன்றும் பேசாது, சிவபெருமானே அவளோடிருந்துப் போயினார் என்று கொண்டு, தம்மிடம் உள்ள ஆயிரம் கழஞ்சு சுவர்ண ஆபரணத்தினை அவளிடம் கொடுத்து அனுப்பினார்.
அவள் செல்லும் வழியில் அக்கஞ்சனூர் வாசிகள் அவளிடம், “ஹரதத்தரது எட்டுப் பிள்ளைகளும் சன்மார்க்க நெறிபூண்டவர்கள்... தகப்பனின் கௌரவத்திற்கு இழுக்குத் தேடித்தராதவர்கள்...” என்றும், ஹரதத்தரது அருமை பெருமைகளை மேலும் கூறி, இறுதியாக, “அவரிடம் நீ பொய் சொல்லி வாங்கிய பொருளை அவரிடமே கொடுத்துவிடு!” என்றனர். அவளும் மிகுந்த மனக்கலக்கம் கொண்டவளாய் ஹரதத்தரிடம் மீண்டும் சென்று வாங்கிய பொருளைத் திருப்பித் தர, அவரோ, “அம்மா... இதை நான் சிவார்ப்பணம் என்று தந்துவிட்டேன்!... திரும்பப்பெறுவதில் பயனில்லை! அர்த்தமும் இல்லை!!” என்று மறுத்து அனுப்பிவிடவே, அத்தாசியானவள் சிவார்ப்பணமாகத் தந்ததை சிவனுக்கே செலுத்தி விடுவோம் என்கிற சித்த சுத்தி பிறந்து, அவ்வாயிரம் கழஞ்சு சுவர்ணாபரணத்தினைக் கொண்டு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்திற்கு மண்டபம், விமானம் முதலிய திருப்பணிகளைச் செய்தாள்.
12. கஞ்சனூரில் ஒருசமயம் நடந்த இரதோற்சவத்தில் கலந்து கொள்ள, ஹரதத்தரின் புதல்விகள் இருவரும் தம் பிதாவை அடைந்து, ஊர்ப் பெண்டிரும், தம் தோழியரும் அணிந்துள்ள ஆபரணம் போன்றுத் தமக்கும் அதுபோன்று ஆபரணங்கள் கேட்க, ஹரதத்தரோ, “உங்கள் அவயத்தில் பூசும் விபூதியே உங்களுக்கு பொன்னிலும் சிறந்த பூஷணம். நீங்கள் சிரவணம் செய்யும் சிவநாமமே காதுக்கு சிறந்த அலங்காரம், நீவிர் செய்யும் சிவலிங்கார்ச்சனையே புனிதமான கரபூஷணம், சிவபெருமானுக்கு நீங்கள் செய்யும் நமஸ்காரமே பாதபூஷணம், இதுவே போதும்.... லௌகிக பூஷணங்கள் எல்லாம் முற்ஜென்மத்தில் இவையிவை வேணுமென்று ஸ்ரீ மஹாதேவரை யார் உபாசித்தார்களோ, அவர்களுக்குத்தான்!.... நமக்கல்ல!!” என்றார். தந்தையாரின் இப்பதிலினால் திருப்தியுறாத அவரது பெண்கள், ஏக்கமாக 'நீங்கள் தருவீரா மாட்டீரா? ' என்றனர்.
அவ்வமயம் ஒர் எருது ஒன்று வீதிவழியே சென்றதைக்கண்ட ஹரதத்தர், தன் பெண்களிடம், 'அவ்வெருதைத் தொடர்ந்து சென்று அதன் பாதம் பட்ட இடத்தில் உங்களுக்கு வேண்டியப் பூஷணங்கள் கிடைக்கும். போய் எடுத்துக் கொள்ளுங்கள்!' என்றபடியே அவர்கள் அந்த எருதின் குளம்படிபட்ட இடத்திலிருந்து நகைகளை எல்லாம் எடுத்து அணிந்து கொள்ளும்போது, தம் தந்தை ஏன் மாட்டின் குளம்படியில் உண்டான ஆபரணங்களை எடுத்து அணியச்சொன்னார்? என்று சிந்தித்து, அவர் அவ்விதம் சொன்னதன் அர்த்தம் புரிந்துகொண்ட ஹரதத்தரது புதல்விகள், தாம் கொணர்ந்த எல்லா ஆபரணங்களையும் ஸ்ரீ அக்னீஸ்வரருக்கும், ஸ்ரீ கற்பக நாயகிக்கும் அணிவித்து அழகு பார்த்தனர்.
13. திருவாவடுதுறை சிவாலயத்திற்கு ஒர் நாள் ஹரதத்தர் சென்று திரும்புகையில், புயல் காற்றுடன், பெருமழையும் வருஷித்தது. ஹரதத்தர் தமதில்லம் திரும்புகையில் இப்படி இடையூறு நேர்த்ததே என்று கலங்க, கோவடு நாதராகிய சிவபெருமான் இடையன் கோலம் தாங்கி, ஹரதத்தருக்குத் துணையாக வந்தார். தமதில்லம் வரை துணையாக வந்த அந்த இடைச் சிறுவனுக்கு ஹரதத்தர் உண்பதற்குப் பாகற்காய் குழம்பும், அன்னமும் அளிக்க, அதை ஹரதத்தர் மிக வருத்தியும் உண்ணாது, 'நான் என் வீட்டிற்குப் போய் சாப்பிடுகிறேன்!' என்று அவரளித்த அன்னத்தை, அச்சிறுவன் எடுத்துச் சென்று திருவாடுதுறை ஆலயம் நுழைந்து சிவலிங்கத்திற்கும், அம்பிகைக்கும் முன்பாக வாரியிறைத்துவிட்டு சிவலிங்கத்தில் மறைந்து அந்தர்த்தானமானான்.
மறுநாள் காலை கோவிலாட்கள் கோவடுநாத ஸ்வாமி முன்பு இறைந்து கிடக்கும் சாதத்தைக் கண்டு, 'இது ஆலய பரிசாரகர்களின் செயலே!' என்று தீர்மானித்து கோவில் பரிசாரகர்களை அழைத்துத் தண்டிக்க தொடங்கின போது முன்னிரவு நடந்தவைகளை சிவபெருமான் அசரீரியாகத் தெரிவித்து ஹரதத்தரின் அன்பையும், தனக்கு ஹரதத்தர் மீதான அன்பையும் தெரிவிக்கவே அங்கிருந்தோர் மிகவும் மகிழ்வெய்தி ஸ்ரீ ஹரதத்தரைப் போற்றினர்.
14. யதீஸ்வரர் என்பவரிடம் திரியம்பகர் என்பவர் சிஷ்யனாக இருந்து, தன் குருவிடம் இருந்து கற்க வேண்டியவைகளைக் கற்றும் “பஞ்சாக்ஷரத்தின் மகிமையை” அறியாமல் இருந்ததினால், யதீஸ்வரர் தன் சிஷ்யன் இவ்விதமாக இருக்கின்றானே என்று மிக வருத்தம் கொண்டு, அவனுக்கு எவ்விதத்திலேனும் பஞ்சாக்ஷர மகிமையை உணரச்செய்ய வேண்டும் என்று தகுந்த காலத்திற்காகக் காத்திருந்தார். இடையில் யதீஸ்வரர் தேக வ்யோகம் அடைந்து மரணகாலம் நெருங்குவதறிந்து, தன் படுக்கை அருகே தரையில் “ஸ்ரீ பஞ்சாக்ஷரத்திற்கு மேலான விஷயம் அறிவதற்கில்லை” என்று தன் சிஷ்யன் திரியம்பகர் அறிவதற்காக எழுதி வைத்ததை, பால் வியாபாரம் செய்யும் கிழவி ஒருத்தி அதைக்கண்டு ஒரு ஓலை நறுக்கில் எழுதிவைத்துத் தன் காதோலையாக சுருட்டி மாட்டிக்கொண்டு, அது ஏதோ அறியக்கூடாத பெரிய ரஹஸ்யம் என்று கருதி, வேறு எவரும் அதை அறியாமலிருக்க, யதீஸ்வரர் தரையில் எழுதியதை, அவள் காலால் அழித்துச் சென்றாள்.
திரும்பிவந்த தன் சிஷ்யனிடம் தேக வியோகத்தில் இருந்த யதீஸ்வரர், தன் சிஷ்யனிடம் பால்காரக் கிழவியிடம் மிக உயர்ந்த செய்தி இருப்பதாக நடந்ததைக் கூறியபின் ப்ராணத்யாகம் செய்துகொண்டார். திரியம்பகரோ, எப்படியேனும் கிழவியிடம் உள்ள காதோலை ரகசியமறிய வேண்டுமென்று அக்கிழவியின் வீட்டிற்குப் போனான். அக் கிழவியோ தன்னுடன் குடும்பம் நடத்தினால் காதோலை தருவதாகச் சொன்னதற்கு இணங்கிய திரியம்பகர், அவளுக்கு வேண்டிய தொழிலெல்லாம் செய்து, அவளைப் ப்ரீதி செய்து ஓர்நாள் அக்காதோலையையும் பெற்றுக் கொண்டான்.
இவ்விதம் தான் தன் குருவின் உபதேசம் பெறுவதற்கு ஓர் கிழவியிடம் இவ்விதம் இழிவாக வாழ நேர்ந்ததே? இதற்குப் பிராயசித்தம் என்ன? என்று யோசித்து ஓர் தைப்பூசத்தன்று, காவிரியில் ஸ்நானம்செய்து, திருவிடைமருதூரில் ஸ்ரீ மஹாலிங்கேஸ் வரரை தரிசித்துப் பின், ஹரதத்தர் இல்லம் வந்து, தன் வரலாறு கூறி, தான் அதுகாறும் அக்கிழவியைக் கூடியிருந்த தோஷம் போக பரிகாரம் கேட்க, ஸ்ரீ ஹரதத்தர், “எவனொருவன் எப்பாவகாரியம் செய்தாலும், தைப்பூசத்தன்று காவிரி ஸ்நானம் செய்து, ஸ்ரீமத்யார்ச்சுனரை வழிபட்டவனாக இருக்கின்றானோ அவன் அதுவரை செய்த பாவத்திலிருந்து அப்போதே விடுபட்டவனாகின்றான்.” என்றார். இவ்விதம் ஸ்ரீ ஹரதத்தார் கூறியதை அவனும், ஊராரும் நம்பாததினால், அவர்கள் அனைவரையும் திருவிடைமருதூர் ஸ்ரீ மத்யார்ச்சுனேஸ்வரர் சந்நிதிக்குள் வரவழைத்து, அங்கு வீற்றிருக்கும் ஸ்வாமியின் திருவாக்கினாலேயே, “மஹாலிங்க தரிசனத்தினாலும், காவிரி ஸ்நானத்தினாலும் அவன் பாபம் போயது!.. போயது!” என்றுரைக்கச் செய்தார்.
15. எங்கும் நடமாட முடியாத தன் சகோதரியின் முடமான பிள்ளையை, அவனது காசியாத்திரை செய்யும் ஆசையை பூர்த்தி செய்ய, கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிரும்ம தீர்த்தத் திருக்குளத்தில் மூழ்கச்செய்து காசியில் உள்ள மணிகர்ணிகையில் எழச்செய்து, காசி விஸ்வனாதரையும், விசாலாக்ஷியையும் தரிசிப்பிக்கச் செய்தார். (அவர் கஞ்சனூரில் மூழ்கி காசியில் எழுந்த போது சங்கரர் உமையுடன் தோன்றி ஸ்ரீ ஹரதத்தரைப் பற்றிக் குசலம் விசாரித்தனராம்!) இதனால் கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத் திருக்குளத்திற்கு மணிகர்ணிகை என்றும் பெயர் உண்டு!.
16. அரவம் தீண்டி இறந்து போன இரண்டுச் சிறுவர்களை, மந்திரித்து விபூதியிட்டு உயிர்த்தெழச் செய்து, அவ்விருவரையும் “கருமம் முடிந்ததினால் இறந்தனர்” என்று அவர்களது பெற்றோருக்கு ஆறுதலுரைத்து, இறந்து போன இரண்டுச் சிறுவர்களை கயிலைக்கு அனுப்பினார்.
17. மன்னனது அரண்மனையில் திருடிய திருடன் ஒருவனை, அரண்மனைக் காவலாளிகள் துரத்த தஞ்சமாக ஹரதத்தர் இல்லம் புகுந்து, தான் அரண்மனையில் திருடியதையும், காவலாளி துரத்துவதையும் கூறியதைக்கேட்ட ஹரதத்தர், “உண்மையைப் பேசின நீ பிராமணனே!” என்று அவனுக்கு விபூதி தாரணமும், யஞ்ஞோபவீத தாரணமும் செய்வித்து உணவளித்து, அரண்மனை காவலர்களிட மிருந்து அவனைக் காத்து, திருத்தி அனுப்பினார்.
இவ்விதம் ஹரதத்தாசாரியார் சர்வ கர்த்தாவாகிய சிவபெருமானையே பூரணபாவனா தியானம் செய்து கொண்டிருத்தார். தன்னைச் சரணடைந்தோரை ரக்ஷிக்கின்ற ஸ்ரீ மஹாதேவர், அவருக்கு சாயுஜ்யம் கொடுக்க வேண்டி, தம்முடன் ப்ருங்கி, நந்தி, மஹாகாளர், பிரம்மா, விஷ்ணு முதலியவர்களோடு எழுந்தருளி உமையுடன் காட்சியளித்துச் சிவலோக ப்ராப்தமளிக்கும் முன், ஹரதத்தர் சிவபெருமானை நமஸ்கரித்து வந்தனம் செய்து, துதித்து, “ ஸ்வாமீ... இப்போது நீர் அடியேனுக்கு வரம் கொடுப்பீராகில், என்னுடனே என் இருபுறத்தும் உள்ள பதினான்கு வீட்டுக்காரர் களுக்கும் மீண்டும் வாரா நெறியாகிய முக்தியிலே சேர்த்தருளும்!.... இதுவே உம்மிடம் நான் கேட்கும் வரம்!...” என்று வேண்ட பக்தரக்ஷகரான ஸ்ரீ மஹாதேவர், “அங்கனமே ஆகுக!” என்று அங்கீகரித்ததன் படியே அனைவரும் வாஹனத்தில் ஏறியதும், சிவபெருமான் ஹரதத்தரிடம், “நீ வேண்டியபடியே ஏறிவிட்டார்கள்... ஆனால் ஒர் ஆள் குறைகிறதே? அது யார்?” என்று கேட்க, ஹரதத்தர், “அவள் ஓர் கிழவி. ஒவ்வொரு நாளும் விக்னேஸ்வரருக்கு மோதகம் செய்து நிவேதிப்பவள். இன்றும் அவளது அந்தப் பணியிலிருப்பதால் அது முடித்து வருவாள்” என்றார்.
ஸ்ரீ மஹாதேவர் வினாயகரை விட்டு அக்கிழவியை அழைத்து வர அனுப்ப, அக்கிழவியோ, தன்னை கயிலைக்கு இட்டுச்செல்ல வந்த ஸ்ரீ கணபதியிடம், “அடுப்பில் மோதகம் இருக்கிறது. அதை விக்னேஸ்வரருக்கு நிவேதித்தப் பின் வருகின்றேன். இப்போது போகின்றவர்கள் முந்திப்போகலாம். நான் நிவேதனம் செய்யாமல் வருவதற்கில்லை!” என்கிற அவளது பதிலைக்கேட்ட ஸ்ரீ விக்னேஸ்வரர், தன் தகப்பனாரும், உலக உயிர்களுக்கெல்லாம் தாயுமானவனாக இருப்பவருமான ஸ்ரீ மகாதேவரிடம் வந்து நடந்தவற்றைச் சொல்ல, ஸ்ரீ மஹாதேவர், புன்முறுவல் பூத்து, கிழவியின் வைராக்கியத்தினை வியந்து, பிள்ளை வினாயகரை நோக்கி, “அக் கிழவியினுடைய பூசையை அங்கீகரித்துக் கொண்டு அவளைக் கைலைக்கு நீ இட்டுக் கொண்டு வருக!!” எனச்சொல்லி அனைவரையும் ரதத்தில் ஏறுமாறு பணித்தார்.
ஹரதத்தருடைய அன்பர்கள் அனைவரும் ரதத்தில் ஏறும் சமயம், ஹரதத்தருடைய எச்சில் இலையில் மீதம் வைத்ததை தினமும் உண்டு வந்த நாயொன்று, அவருடைய பிரிவைத் தாங்காது இரக்கத்தினால் மிகுதியாக அழவே, ஹரதத்தர் அதையும் தம்முடன் இரதத்தில் ஏற்றிவைத்து தாமும் ஏறி, அவர்கள் எல்லோரும் அழியாததும், பழிப்பற்றதும், ஆனந்தமே உருவமானதும், பகலிரவு அற்றதும், ஸ்ரீபரமேஸ்வரரையே ஒத்ததுமான ஸ்ரீ கைலாசத்தை அடைந்தார்கள்.
ஸ்ரீ ஹரதத்தாச்சாரியாரின் திவ்ய சரித்திரம் முற்றிற்று.
வாழ்வில் நடந்தவை
1. ஒருநாள் அக்னீஸ்வர ஸ்வாமிக்கு திருத்தொண்டு செய்யும் சில கணிகைகள் அவர்தம் பணிக்கு வராது, தாமதமாக மறுநாள் ஆலயப்பணிக்கு வந்தமையால், கோவிலதிகாரிகள் அவர்களைத் தண்டித்து, அக்கணிகைகளை கோவில் மண்டபத்தில் ஏற்றி அன்ன ஆகாரமில்லாது மிகவும் வருத்தினார்கள்.
ஹரதத்தரோ, வழக்கமாகத் தாம் வரும் காலம் தப்பி மத்தியானத்திற்குப் பின் தனது நித்திய ஆலயசேவையின் பொருட்டு அங்கே வந்தவரிடம் அக் கணிகைகள் தங்கள் துயரத்தினைக் கூற, “உங்களைத் தண்டிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த தண்டனையைப் பெறும் உங்களது பாக்கியம் எனக்கில்லை!.... என்னைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் அதிகாரிகள் ஒருவரும் இல்லை! ஆலய சேவைக்கு தாமதமாக வந்த என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன்!” என்று தன் தலையை கருங்கல் தூணில் முட்டிக் கொண்டும், அழுது புரண்டும் மூர்ச்சித்துத் தரையில் விழுந்தார். இவரது இச்செய்கை கண்டு மனத்துயரம் அடைந்த கோவிலதிகாரிகள் செய்வதறியாது அக்கணிகையரை விடுவித்தனர்.
2. மேற்குறித்த நாளன்று ஹரதத்தர் தமது நித்தியக் கர்மாநுஷ்டங்களை முடித்துத் தம் கிருஹத்தில் சிவபெருமானுக்குப் பூஜை செய்து அபிஷேகம் செய்யும் போது, நாயொன்று தாக மேலீட்டினால் நாக்கை நீட்டவே, இவர் அந்த சங்காபிஷேக ஜலத்தினை அந்த நாயின் நாவிலே விட்டு எஞ்சியதைச் சிவலிங்கத்தில் அபிஷேகஞ் செய்தார். இவரது இக்காரியத்தினைக் கண்டவர்கள், “நீர் அநுசிதமான காரியத்தை இவ்விதம் செய்யலாமோ?” என்றதற்கு, “என்மீதுள்ள அன்பினாலே சிவபெருமானெ இந்நாயுருக் கொண்டு எழுந்தருளினால் யான் என்ன செய்ய?” என்றார்.
3. ஓர் நாள் மன்னர் சிவலிங்க பூபதி, அக்னீஸ்வரப் பெருமானுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு மிகுந்த விலை மதிப்புள்ள பீதாம்பரம் ஒன்றினை ஹரதத்தரிடம் சமர்ப்பிக்கச் சொல்லி தம் பணியாளரிடம் தந்தனுப்ப, அச்சமயம் ஹரதத்தர் அக்னி வளர்த்து ஹோம காரியம் செய்து கொண்டிருக்கவே, அரசனுடைய பணியாட்கள் தன்னிடம் நீட்டிய அந்தப் பீதாம்பரத்தினை, சிவபெருமானை சிந்தனை செய்து அந்த ஹோம குண்டத்தில் இட்டு பஸ்மீகரமாக்கினார். இவரது இச்செய்கையை தம் பணியாள் மூலம் அறிந்த மன்னன், ஹரதத்தர் மீது எவ்வித வெறுப்புமின்றி, ஹரதத்தர் எல்லாம் தெரிந்தவராதலால் அவரையே இவ்விஷயம் குறித்துக் கேட்டறிய ஹரதத்தரது கிரஹத்திற்கு வந்தார்.
மன்னனது உளக்குறிப்பையறிந்த ஸ்ரீ ஹரதத்தாச்சாரியார், மன்னனை அழைத்துக் கொண்டு போய் அக்னீஸ்வரர் ஆலயத்தில் அம்மன்னன் அளித்த வஸ்திரம், ஸ்ரீ அக்னீஸ்வரருக்குச் சார்த்தப் பட்டிருப்பதைக் காண்பித்தார். சிவலிங்கச் சோழமன்னன், தமது குற்றம் பொருக்க வேண்டுமென அவரது பாதத்தைத் தம் கண்ணீரால் அலம்பி, மன்னிப்புக் கோரினான்.
4. ஹரதத்தர் வாழ்ந்த அக்ரஹாரத்திலே நிறைய பசுக்களை வளர்த்து வந்த ஒர் அந்தணன், ஒரு நாள் தன் வீட்டுக் கொல்லைப்புறமாக வைக்கோற் கட்டை மதிலோரமாகப் போட்ட பொழுது, அம்மதிலின் மறுபுறத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளம் கன்று ஒன்று அவ்வைக்கோற் கட்டின் பாரம் தாங்காது அதிர்ச்சியில் இறந்தது. இதையறிந்த அப்பிராமணன் மிகுந்த துயருற்றான்.
“நீ கோஹத்திச் செய்தாய்! நீ கோஹத்திச் செய்தாய்!!” என்று ஊரார் அவரை துவேஷித்து நிந்தா வார்த்தைகள் கூறி அவரை மேலும் கலக்கமடையச் செய்யவே, இதற்கோர் பிராயச்சித்தம் ஸ்ரீ ஹரதத்தர் சொல்வார் என்று ஹரதத்தரது வீட்டிற்குள் பதட்டத்துடன் நுழைந்த அப்பிராமணரது தலையில் வீட்டு வாயிற்படி இடித்தது. இடிபட்ட வலி தாங்காத அப்பிராமணன், “சிவ சிவ” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
அவர் வந்த விவரம் அறிந்த ஸ்ரீ ஹரதத்தர், “என் வீட்டிற்குள் நுழைந்த போது நீர் முதலில் சொன்ன சிவ எனும் சப்தத்தினால் உன் கோஹத்தி பாவ விமோசனமும். இரண்டாம் முறை சொன்ன சிவ சப்தத்தினால் மரித்த அக்கன்றுக்கு முக்தியும் உண்டாயிற்று!” என்று சொன்னார்.
ஹரதத்தருடைய விட்டில் அவ்வமயம் அங்கிருந்த இன்னொரு பிராமணன், “பாவிகள் ஈசனை வணங்குதல் முறையாகாது.... இவனோ கோஹத்தி செய்த மஹா பாபி.... இவன் செய்த அக்கொடுரச்செயல் இவன் சொன்ன சிவநாமத்தினால் நிவாரண மெய்துமோ!......? வேடிக்கை!!” என்று சொன்னான்.
இவ்விதம் தன் சந்தேகத்தினை வெளியிட்டவனை நோக்கி ஹரதத்தர், “சிவ பெருமானுடைய மாயையானது பிரம, விஷ்ணுக்களையும் மயக்கிவிடுமே!.... இவனை அது தப்பவிடுமா!... சிவ நாமத்தினாலே ஒழிக்கத்தக்கப் பாவத்தினை செய்யத் தக்கவர்கள் இவ்வுலகில் இல்லை என்பதினால்தான் ஸ்மிருதிகளிலே இந்த சிவநாமம் பிராயச்சித்தமாக சொல்லப்பட்டிருக் கிறது... உங்களுக்கெல்லாம் இவன் செய்த பாவம் நீங்கியது என்பது தெரியவேண்டுமென்றால், இவன் என்ன செய்யவேண்டும்?!....” என்று கேட்கவே, அப்பிராமணனுடைய கருத்தைக் கொண்ட ஊரார் அனைவரும் ஒருமனதாகத் தீர்மானித்து, “கோஹத்தி செய்த பிராமணன் தரும் புல்லினை அக்னீஸ்வரர் ஆலயத்திலுள்ள கல்நந்தி சாப்பிட்டால் ஒப்புக்கொள்வதாகச்” சொன்னார்கள்.
கோஹத்தி செய்த அந்த பிராமணனும், முறைப்படி பூஜை புனஸ்காரங்கள் முடித்து அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரை நமஸ்கரித்து, அங்குள்ள நந்தியெம் பெருமானது வலதுபுறம் நின்று தம் கையில் அறுகம்புல் வைத்துக்கொண்டு, “அஷ்டமூர்த்தியாகிய சிவபெருமானைத் தாங்குபவரே!.... தயாநிதியே!... சிவநாமோச் சரத்தினால் என்பாவம் நீங்கிற்று என்றால், இந்தப் புல்லைச் சாப்பிட்டு என்னை எப்போதும் ரக்ஷித்தருளுக!” என்று வேண்டியவுடன், விருஷபதேவர் தன் நாக்கை அவர் பக்கம் சுழட்டி அவரளித்த அறுகன் புல்லைக் கிரஹித்து உண்டார். அதுகண்டு கூடியிருந்த அக்ரஹாரத்தினர் 'அவரது பாவம் ஒழிந்தது! ஒழிந்தது!!' என்றும், 'ஹரதத்தர் சாட்சாத் சிவ ஸ்வரூபியே' என்றுணர்ந்து அவரை நமஸ்கரித்து, அவரவர் தத்தமது வீடு போனார்கள்.
5. நிறையப் பிள்ளைக் குட்டிகளுடன் மிகுந்த வறுமையில் வாடின சதாசிவம் எனும் பிராமணரது வீட்டில் ஓர்நாள் ஸ்ரீ ஹரதத்தர் உணவு உண்கையில் அவரது வறுமை நிலையறிந்து, மன்னர் சிவலிங்க பூபதியினால் அவரை அவரது ஏழ்மையிலிருந்து நல்ல நிலைக்கு ஏற்றினார்.
6. ஒரு சமயம் ஸ்ரீ ஹரதத்தரது தாயார் நெல்லைக் காயவைத்துக் கொண்டு இருந்த போது அந்நெல்லை ஓர் காளை வந்து மேயவே, அவரது தாயார் அக்காளையை வெகுவாய் அடித்துத் துரத்தினார். அதைக் கண்ட ஹரதத்தர், “ஏனம்மா இப்படிச் செய்தாய்?” என்று கேட்க, “சிவநிவேதனத்துக்கு ஒன்றுமில்லையாதலால், இதைக்கொண்டு அது நடத்தல் வேண்டும்.. அதனால் இப்படிச் செய்தேன்!” என்றாள்.
அச்சமயம், மன்னர் சிவலிங்கபூபதி இவருக்கு 400 மூட்டை நெல்லை அனுப்பியதில், இருநூறு மூட்டைகள் நதிப்ரவாகத்தில் போய்விட்டதை, கொண்டு வந்தவர்கள் சொன்னதும், ஹரதத்தர் தன் தாயாரிடம், “நீ காளையைத் திண்ணவொட்டாது அடித்து ஓட்டிய உன் துர்ச்செயலால்தான் நாநூறு இருநூறானது!” என்றார் சிரித்துக் கொண்டே!.
7. ஒரு சமயம் இவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போது நாயொன்று களைந்து வைத்த அரிசியில் வாயை வைக்கவே, சமையல் வேலையில் இருந்த அவரது மனைவி, கையில் வைத்திருந்த அறிவாள் மனையினால் அடிக்க, அது நாய் மீது பட்டு மூர்ச்சித்து வீழ்ந்தது. அப்போது அங்கு வந்த ஹரதத்தர், நடந்தவை அறிந்து, "நீ வாசலைத் தாழிடாததினால்தான் நாய் உள்ளே புகுந்தது. உன் குற்றம் இப்படி இருக்க, நீ நாயைத் தண்டித்தது முறையல்ல!...” என்று கூறி அந்நாயைத் தன் மடிமீது கிடத்தி, அதற்கு உருத்திராக்ஷம் தரிப்பித்து, விபூதியை உடலெங்கும் பூசி, பஞ்சாக்ஷரம் ஜெபித்து, அந்நாயைப் பூதசரீரத்திலிருந்து, தேவ சரீரத்தினை எடுப்பிக்கச்செய்து அதற்கு கைலாயக் கதியருளினார்.
8. தன் தாய் காளையை வெருட்டியதற்கும், மனைவி நாயை அறிவாள்மனையால் அடித்ததற்கும் பிராயச்சித்தம் செய்வதற்கு, “தெரிந்தும் தெரியாமல் செய்த மஹா பாபங்களுக்கு, ஏகாந்தத்தில் இருந்து சிவ நாமத்தினை ஜெபித்தலே பிராயச்சித்தமாம்” எனும் பொருளில் ஒர் ஸ்லோகம் எழுதினார். இதில் முதல் வரி இவரும் இரண்டாம் வரியை ஹரதத்தர் குளிக்கச்சென்றபோது, இவருருவில் வந்த ஸ்ரீ மஹாதேவரும் எழுதியதாகும். அந்த ஸ்லோகம்:
ஞாநாஞ் ஞாநப்ரயுக்தாநாம் பாபாநாம் மஹதாமபி |
ஏகாந்த நிஷ்க்ரதிச் சம்போஸ்ஸகிர் தேவஹிகீர்த்தநாத் ||
9. ஓர் நாள் இவர் காவிரியில் ஸ்நாநம் செய்யப் போன போது, அங்கு ஒரு சண்டாளன் ஒருவன், தன் மனைவியைக் காவிரியில் குளிக்காதே! என்று தடுக்க, அவளோ, 'காவிரியைத் தரிசித்தாலும், அதில் குளித்தாலும் மஹாபாபங்கள் நீங்குவதாக நீதானே சொன்னாய்?' என்று திருப்பிக் கேட்டதற்கு, அச்சண்டாளன், “அடீ.. காவேரித் தீரத்திலே எவ்வளவு மணலுண்டோ அவ்வளவும் சிவலிங்கமடி!! “ என்றதைக் கேட்ட ஹரதத்தர், அச்சண்டாளனின் காலில் வீழ்ந்து வணங்கி, அவனது செருப்பைத் தன் தலைமீது வைத்து ஆனந்தக் கூத்தாடி, “உலகத்திலே சிலர் ஞானத்தைத் தாங்குகிறார்கள்... வேறு சிலர் தன் கர்மத்தைச் சுமக்கிறார்கள்.. நாமோ இந்தச் சிவபக்தருடைய பாதரக்ஷயைத் தாங்குகிறோம்!.” என்று மகிழ்ந்தார்.
10. தம்மைச் சரணடைந்து கைலாயம் செல்ல விரும்பிய மன்னர் சிவலிங்க பூபதியிடம், “அரையாமப் பொழுதிற்குள் அக்னீஸ்வரர் ஆலயத்தையும், அதைச் சுற்றியுள்ள ஏழு சிவாலயங்களையும் தரிசனம் செய்தால் உமக்குக் கயிலாயக் காட்சி கிட்டும்!” என்று ஹரதத்தர் சொல்லியவாறு மன்னன் தன் பரிவாரங்களுடன், குதிரை மீதேறிச் சென்று அவ்வேழு சிவாலயங்களையும் தரிசித்து முடித்து ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம் நுழைந்த போது, மன்னனுடனே ஓடிவந்தக் களைப்பில் குடைபிடிப்போனும், குதிரையும் மூர்ச்சித்து விழுந்தனர்.
சேவகனும், குதிரையும் அவ்விதம் மூர்ச்சித்த மறுகணம், அங்கு வந்த புஷ்பக விமானதில் அவர்கள் தம் சரீரத்துடனே ஏறி கயிலைக்குச் சென்றனர். மன்னனோ, மிகுந்த மனக்கலக்கம் அடைந்தவனாக, குதிரையும், தன் சேவகனும் செய்த பாக்கியத்தை தான் செய்யவில்லையோ? என்று மிகவும் வருந்தி, தன் குதிரையும், குடைபிடித்து வந்த சேவகனும் விமானம் ஏறி கயிலைக்குச் சென்றது போன்று, தான் செல்ல முடியாததற்கு ஸ்ரீ ஹரதத்தாச்சாரியரிடம் காரணம் கேட்டான். தன்னிடம் இவ்விதம் மிகவருந்தி உபாயம் கேட்ட அரசனிடம் ஹரதத்தர், “உன்னுடன் வந்த அவ்விருவரது சரீர சிரமத்தினை நீ அடையாமல், அரசன் எனும் அகந்தையில் ஏழு சிவாலயங்கள் சென்று வந்தாய். தேக சிரமம் பாராமல், தான் என்கின்ற எண்ணத்தை விட்டு, மீண்டும் நீ பாதாசாரியாய் அந்த ஏழு சிவாலயங்களை தரிசித்து விட்டு வருவாயேயானால் அவர்களுக்கு கிடைத்த அந்த நற்கதி உனக்கும் கிட்டும்.” என்றபடி மன்னனும் அதன்படிச் செய்து தன் சரீரத்துடன் தேவர்கள் பூச்சொரிய, சிவபெருமானுடன் வாஹனத்தின் மீதேறிக் கயிலை சென்றார்.
11. கஞ்சனூரில் புதிதாய் குடியேறிய தாசி ஒருத்தியை அடைய பக்கத்து ஊர் பிராமணன் ஒருவன் அவளிடம், தான் ஹரதத்தரின் புதல்வர் என்றும், வேண்டும் பொருள் தருவேன் என்றும் ஆசைவார்தைகள் நிறைய கூறி, அவளுடன் சில நாட்கள் சுகித்திருந்துவிட்டு ஓர்நாள் அப் பிராமணன் ஒன்றும் கொடுக்காமல் தனது கிராமத்திற்குச் சென்று விட்டான். தன்னை வஞ்சித்த அப்பிராமணனது செயலுக்கு நியாயம் கேட்க, அத்தாசியானவள் ஹரதத்தரை அடைந்து நடந்தது கூறி, நியாயம் கேட்டாள். ஹரதத்தர் ஒன்றும் பேசாது, சிவபெருமானே அவளோடிருந்துப் போயினார் என்று கொண்டு, தம்மிடம் உள்ள ஆயிரம் கழஞ்சு சுவர்ண ஆபரணத்தினை அவளிடம் கொடுத்து அனுப்பினார்.
அவள் செல்லும் வழியில் அக்கஞ்சனூர் வாசிகள் அவளிடம், “ஹரதத்தரது எட்டுப் பிள்ளைகளும் சன்மார்க்க நெறிபூண்டவர்கள்... தகப்பனின் கௌரவத்திற்கு இழுக்குத் தேடித்தராதவர்கள்...” என்றும், ஹரதத்தரது அருமை பெருமைகளை மேலும் கூறி, இறுதியாக, “அவரிடம் நீ பொய் சொல்லி வாங்கிய பொருளை அவரிடமே கொடுத்துவிடு!” என்றனர். அவளும் மிகுந்த மனக்கலக்கம் கொண்டவளாய் ஹரதத்தரிடம் மீண்டும் சென்று வாங்கிய பொருளைத் திருப்பித் தர, அவரோ, “அம்மா... இதை நான் சிவார்ப்பணம் என்று தந்துவிட்டேன்!... திரும்பப்பெறுவதில் பயனில்லை! அர்த்தமும் இல்லை!!” என்று மறுத்து அனுப்பிவிடவே, அத்தாசியானவள் சிவார்ப்பணமாகத் தந்ததை சிவனுக்கே செலுத்தி விடுவோம் என்கிற சித்த சுத்தி பிறந்து, அவ்வாயிரம் கழஞ்சு சுவர்ணாபரணத்தினைக் கொண்டு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்திற்கு மண்டபம், விமானம் முதலிய திருப்பணிகளைச் செய்தாள்.
12. கஞ்சனூரில் ஒருசமயம் நடந்த இரதோற்சவத்தில் கலந்து கொள்ள, ஹரதத்தரின் புதல்விகள் இருவரும் தம் பிதாவை அடைந்து, ஊர்ப் பெண்டிரும், தம் தோழியரும் அணிந்துள்ள ஆபரணம் போன்றுத் தமக்கும் அதுபோன்று ஆபரணங்கள் கேட்க, ஹரதத்தரோ, “உங்கள் அவயத்தில் பூசும் விபூதியே உங்களுக்கு பொன்னிலும் சிறந்த பூஷணம். நீங்கள் சிரவணம் செய்யும் சிவநாமமே காதுக்கு சிறந்த அலங்காரம், நீவிர் செய்யும் சிவலிங்கார்ச்சனையே புனிதமான கரபூஷணம், சிவபெருமானுக்கு நீங்கள் செய்யும் நமஸ்காரமே பாதபூஷணம், இதுவே போதும்.... லௌகிக பூஷணங்கள் எல்லாம் முற்ஜென்மத்தில் இவையிவை வேணுமென்று ஸ்ரீ மஹாதேவரை யார் உபாசித்தார்களோ, அவர்களுக்குத்தான்!.... நமக்கல்ல!!” என்றார். தந்தையாரின் இப்பதிலினால் திருப்தியுறாத அவரது பெண்கள், ஏக்கமாக 'நீங்கள் தருவீரா மாட்டீரா? ' என்றனர்.
அவ்வமயம் ஒர் எருது ஒன்று வீதிவழியே சென்றதைக்கண்ட ஹரதத்தர், தன் பெண்களிடம், 'அவ்வெருதைத் தொடர்ந்து சென்று அதன் பாதம் பட்ட இடத்தில் உங்களுக்கு வேண்டியப் பூஷணங்கள் கிடைக்கும். போய் எடுத்துக் கொள்ளுங்கள்!' என்றபடியே அவர்கள் அந்த எருதின் குளம்படிபட்ட இடத்திலிருந்து நகைகளை எல்லாம் எடுத்து அணிந்து கொள்ளும்போது, தம் தந்தை ஏன் மாட்டின் குளம்படியில் உண்டான ஆபரணங்களை எடுத்து அணியச்சொன்னார்? என்று சிந்தித்து, அவர் அவ்விதம் சொன்னதன் அர்த்தம் புரிந்துகொண்ட ஹரதத்தரது புதல்விகள், தாம் கொணர்ந்த எல்லா ஆபரணங்களையும் ஸ்ரீ அக்னீஸ்வரருக்கும், ஸ்ரீ கற்பக நாயகிக்கும் அணிவித்து அழகு பார்த்தனர்.
13. திருவாவடுதுறை சிவாலயத்திற்கு ஒர் நாள் ஹரதத்தர் சென்று திரும்புகையில், புயல் காற்றுடன், பெருமழையும் வருஷித்தது. ஹரதத்தர் தமதில்லம் திரும்புகையில் இப்படி இடையூறு நேர்த்ததே என்று கலங்க, கோவடு நாதராகிய சிவபெருமான் இடையன் கோலம் தாங்கி, ஹரதத்தருக்குத் துணையாக வந்தார். தமதில்லம் வரை துணையாக வந்த அந்த இடைச் சிறுவனுக்கு ஹரதத்தர் உண்பதற்குப் பாகற்காய் குழம்பும், அன்னமும் அளிக்க, அதை ஹரதத்தர் மிக வருத்தியும் உண்ணாது, 'நான் என் வீட்டிற்குப் போய் சாப்பிடுகிறேன்!' என்று அவரளித்த அன்னத்தை, அச்சிறுவன் எடுத்துச் சென்று திருவாடுதுறை ஆலயம் நுழைந்து சிவலிங்கத்திற்கும், அம்பிகைக்கும் முன்பாக வாரியிறைத்துவிட்டு சிவலிங்கத்தில் மறைந்து அந்தர்த்தானமானான்.
மறுநாள் காலை கோவிலாட்கள் கோவடுநாத ஸ்வாமி முன்பு இறைந்து கிடக்கும் சாதத்தைக் கண்டு, 'இது ஆலய பரிசாரகர்களின் செயலே!' என்று தீர்மானித்து கோவில் பரிசாரகர்களை அழைத்துத் தண்டிக்க தொடங்கின போது முன்னிரவு நடந்தவைகளை சிவபெருமான் அசரீரியாகத் தெரிவித்து ஹரதத்தரின் அன்பையும், தனக்கு ஹரதத்தர் மீதான அன்பையும் தெரிவிக்கவே அங்கிருந்தோர் மிகவும் மகிழ்வெய்தி ஸ்ரீ ஹரதத்தரைப் போற்றினர்.
14. யதீஸ்வரர் என்பவரிடம் திரியம்பகர் என்பவர் சிஷ்யனாக இருந்து, தன் குருவிடம் இருந்து கற்க வேண்டியவைகளைக் கற்றும் “பஞ்சாக்ஷரத்தின் மகிமையை” அறியாமல் இருந்ததினால், யதீஸ்வரர் தன் சிஷ்யன் இவ்விதமாக இருக்கின்றானே என்று மிக வருத்தம் கொண்டு, அவனுக்கு எவ்விதத்திலேனும் பஞ்சாக்ஷர மகிமையை உணரச்செய்ய வேண்டும் என்று தகுந்த காலத்திற்காகக் காத்திருந்தார். இடையில் யதீஸ்வரர் தேக வ்யோகம் அடைந்து மரணகாலம் நெருங்குவதறிந்து, தன் படுக்கை அருகே தரையில் “ஸ்ரீ பஞ்சாக்ஷரத்திற்கு மேலான விஷயம் அறிவதற்கில்லை” என்று தன் சிஷ்யன் திரியம்பகர் அறிவதற்காக எழுதி வைத்ததை, பால் வியாபாரம் செய்யும் கிழவி ஒருத்தி அதைக்கண்டு ஒரு ஓலை நறுக்கில் எழுதிவைத்துத் தன் காதோலையாக சுருட்டி மாட்டிக்கொண்டு, அது ஏதோ அறியக்கூடாத பெரிய ரஹஸ்யம் என்று கருதி, வேறு எவரும் அதை அறியாமலிருக்க, யதீஸ்வரர் தரையில் எழுதியதை, அவள் காலால் அழித்துச் சென்றாள்.
திரும்பிவந்த தன் சிஷ்யனிடம் தேக வியோகத்தில் இருந்த யதீஸ்வரர், தன் சிஷ்யனிடம் பால்காரக் கிழவியிடம் மிக உயர்ந்த செய்தி இருப்பதாக நடந்ததைக் கூறியபின் ப்ராணத்யாகம் செய்துகொண்டார். திரியம்பகரோ, எப்படியேனும் கிழவியிடம் உள்ள காதோலை ரகசியமறிய வேண்டுமென்று அக்கிழவியின் வீட்டிற்குப் போனான். அக் கிழவியோ தன்னுடன் குடும்பம் நடத்தினால் காதோலை தருவதாகச் சொன்னதற்கு இணங்கிய திரியம்பகர், அவளுக்கு வேண்டிய தொழிலெல்லாம் செய்து, அவளைப் ப்ரீதி செய்து ஓர்நாள் அக்காதோலையையும் பெற்றுக் கொண்டான்.
இவ்விதம் தான் தன் குருவின் உபதேசம் பெறுவதற்கு ஓர் கிழவியிடம் இவ்விதம் இழிவாக வாழ நேர்ந்ததே? இதற்குப் பிராயசித்தம் என்ன? என்று யோசித்து ஓர் தைப்பூசத்தன்று, காவிரியில் ஸ்நானம்செய்து, திருவிடைமருதூரில் ஸ்ரீ மஹாலிங்கேஸ் வரரை தரிசித்துப் பின், ஹரதத்தர் இல்லம் வந்து, தன் வரலாறு கூறி, தான் அதுகாறும் அக்கிழவியைக் கூடியிருந்த தோஷம் போக பரிகாரம் கேட்க, ஸ்ரீ ஹரதத்தர், “எவனொருவன் எப்பாவகாரியம் செய்தாலும், தைப்பூசத்தன்று காவிரி ஸ்நானம் செய்து, ஸ்ரீமத்யார்ச்சுனரை வழிபட்டவனாக இருக்கின்றானோ அவன் அதுவரை செய்த பாவத்திலிருந்து அப்போதே விடுபட்டவனாகின்றான்.” என்றார். இவ்விதம் ஸ்ரீ ஹரதத்தார் கூறியதை அவனும், ஊராரும் நம்பாததினால், அவர்கள் அனைவரையும் திருவிடைமருதூர் ஸ்ரீ மத்யார்ச்சுனேஸ்வரர் சந்நிதிக்குள் வரவழைத்து, அங்கு வீற்றிருக்கும் ஸ்வாமியின் திருவாக்கினாலேயே, “மஹாலிங்க தரிசனத்தினாலும், காவிரி ஸ்நானத்தினாலும் அவன் பாபம் போயது!.. போயது!” என்றுரைக்கச் செய்தார்.
15. எங்கும் நடமாட முடியாத தன் சகோதரியின் முடமான பிள்ளையை, அவனது காசியாத்திரை செய்யும் ஆசையை பூர்த்தி செய்ய, கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிரும்ம தீர்த்தத் திருக்குளத்தில் மூழ்கச்செய்து காசியில் உள்ள மணிகர்ணிகையில் எழச்செய்து, காசி விஸ்வனாதரையும், விசாலாக்ஷியையும் தரிசிப்பிக்கச் செய்தார். (அவர் கஞ்சனூரில் மூழ்கி காசியில் எழுந்த போது சங்கரர் உமையுடன் தோன்றி ஸ்ரீ ஹரதத்தரைப் பற்றிக் குசலம் விசாரித்தனராம்!) இதனால் கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத் திருக்குளத்திற்கு மணிகர்ணிகை என்றும் பெயர் உண்டு!.
16. அரவம் தீண்டி இறந்து போன இரண்டுச் சிறுவர்களை, மந்திரித்து விபூதியிட்டு உயிர்த்தெழச் செய்து, அவ்விருவரையும் “கருமம் முடிந்ததினால் இறந்தனர்” என்று அவர்களது பெற்றோருக்கு ஆறுதலுரைத்து, இறந்து போன இரண்டுச் சிறுவர்களை கயிலைக்கு அனுப்பினார்.
17. மன்னனது அரண்மனையில் திருடிய திருடன் ஒருவனை, அரண்மனைக் காவலாளிகள் துரத்த தஞ்சமாக ஹரதத்தர் இல்லம் புகுந்து, தான் அரண்மனையில் திருடியதையும், காவலாளி துரத்துவதையும் கூறியதைக்கேட்ட ஹரதத்தர், “உண்மையைப் பேசின நீ பிராமணனே!” என்று அவனுக்கு விபூதி தாரணமும், யஞ்ஞோபவீத தாரணமும் செய்வித்து உணவளித்து, அரண்மனை காவலர்களிட மிருந்து அவனைக் காத்து, திருத்தி அனுப்பினார்.
இவ்விதம் ஹரதத்தாசாரியார் சர்வ கர்த்தாவாகிய சிவபெருமானையே பூரணபாவனா தியானம் செய்து கொண்டிருத்தார். தன்னைச் சரணடைந்தோரை ரக்ஷிக்கின்ற ஸ்ரீ மஹாதேவர், அவருக்கு சாயுஜ்யம் கொடுக்க வேண்டி, தம்முடன் ப்ருங்கி, நந்தி, மஹாகாளர், பிரம்மா, விஷ்ணு முதலியவர்களோடு எழுந்தருளி உமையுடன் காட்சியளித்துச் சிவலோக ப்ராப்தமளிக்கும் முன், ஹரதத்தர் சிவபெருமானை நமஸ்கரித்து வந்தனம் செய்து, துதித்து, “ ஸ்வாமீ... இப்போது நீர் அடியேனுக்கு வரம் கொடுப்பீராகில், என்னுடனே என் இருபுறத்தும் உள்ள பதினான்கு வீட்டுக்காரர் களுக்கும் மீண்டும் வாரா நெறியாகிய முக்தியிலே சேர்த்தருளும்!.... இதுவே உம்மிடம் நான் கேட்கும் வரம்!...” என்று வேண்ட பக்தரக்ஷகரான ஸ்ரீ மஹாதேவர், “அங்கனமே ஆகுக!” என்று அங்கீகரித்ததன் படியே அனைவரும் வாஹனத்தில் ஏறியதும், சிவபெருமான் ஹரதத்தரிடம், “நீ வேண்டியபடியே ஏறிவிட்டார்கள்... ஆனால் ஒர் ஆள் குறைகிறதே? அது யார்?” என்று கேட்க, ஹரதத்தர், “அவள் ஓர் கிழவி. ஒவ்வொரு நாளும் விக்னேஸ்வரருக்கு மோதகம் செய்து நிவேதிப்பவள். இன்றும் அவளது அந்தப் பணியிலிருப்பதால் அது முடித்து வருவாள்” என்றார்.
ஸ்ரீ மஹாதேவர் வினாயகரை விட்டு அக்கிழவியை அழைத்து வர அனுப்ப, அக்கிழவியோ, தன்னை கயிலைக்கு இட்டுச்செல்ல வந்த ஸ்ரீ கணபதியிடம், “அடுப்பில் மோதகம் இருக்கிறது. அதை விக்னேஸ்வரருக்கு நிவேதித்தப் பின் வருகின்றேன். இப்போது போகின்றவர்கள் முந்திப்போகலாம். நான் நிவேதனம் செய்யாமல் வருவதற்கில்லை!” என்கிற அவளது பதிலைக்கேட்ட ஸ்ரீ விக்னேஸ்வரர், தன் தகப்பனாரும், உலக உயிர்களுக்கெல்லாம் தாயுமானவனாக இருப்பவருமான ஸ்ரீ மகாதேவரிடம் வந்து நடந்தவற்றைச் சொல்ல, ஸ்ரீ மஹாதேவர், புன்முறுவல் பூத்து, கிழவியின் வைராக்கியத்தினை வியந்து, பிள்ளை வினாயகரை நோக்கி, “அக் கிழவியினுடைய பூசையை அங்கீகரித்துக் கொண்டு அவளைக் கைலைக்கு நீ இட்டுக் கொண்டு வருக!!” எனச்சொல்லி அனைவரையும் ரதத்தில் ஏறுமாறு பணித்தார்.
ஹரதத்தருடைய அன்பர்கள் அனைவரும் ரதத்தில் ஏறும் சமயம், ஹரதத்தருடைய எச்சில் இலையில் மீதம் வைத்ததை தினமும் உண்டு வந்த நாயொன்று, அவருடைய பிரிவைத் தாங்காது இரக்கத்தினால் மிகுதியாக அழவே, ஹரதத்தர் அதையும் தம்முடன் இரதத்தில் ஏற்றிவைத்து தாமும் ஏறி, அவர்கள் எல்லோரும் அழியாததும், பழிப்பற்றதும், ஆனந்தமே உருவமானதும், பகலிரவு அற்றதும், ஸ்ரீபரமேஸ்வரரையே ஒத்ததுமான ஸ்ரீ கைலாசத்தை அடைந்தார்கள்.
ஸ்ரீ ஹரதத்தாச்சாரியாரின் திவ்ய சரித்திரம் முற்றிற்று.